மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வால்பாறையில் தீயணைப்புத்துறையினர் ஒத்திகை

மழைக்காலத்தில் வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து வால்பாறை தீயணைப்புத்துறையினர் கூழாங்கள் ஆற்றில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மே மாதம் என்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்து வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது மழையும் அதிகமாக பெய்து வருகிறது.

இந்த மழையால் வால்பாறையில் உள்ள கூழாங்கள் ஆறு, சின்னகல்லார் நீர்வீழ்ச்சி, கருமலை ஆறு மற்றும் கெஜமுடி ஆறு, ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் தண்ணீரில் இறங்கி குளித்து மகிழும் இடமாக கூழாங்கள் ஆறு உள்ளது.

இந்நிலையில் மழை சமயங்களில் வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து வால்பாறை தீயணைப்புத்துறையினர் கூழாங்கள் ஆற்றில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.



இதில் தண்ணீரில் தத்தளிக்கும் சிறுவனை கயிறு கட்டி தீயணைப்பு படையினர் காப்பற்றி வருவதும், நீரில் மூழ்கிய நிலையில் சிறுவனை காப்பாற்றி வருவது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.



பின்பு சுற்றுலா பயணிகளுக்கு மழைக்காலங்களில் ஆற்றில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. இதில் தீயணைப்பு துறையினர், சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...