கோவை, பந்தைய சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி.எஸ்.ஆர் திட்டப்பணிகளின் கீழ் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் புதுபிக்கப்பட்ட சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கவிதாசன் புதுபிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.

மேலும், அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கான கழிப்பிடம் மற்றும் அதற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான வசதியை செய்து கொடுக்க வேண்டுமென ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜெயலட்சுமி கேட்டுக் கொண்டதை அடுத்து, ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது சி.எஸ்.ஆர் திட்டப்பணிகளின் கீழ் ரூபாய் 7.50 லட்சம் செலவில் மாணவர்கள் விடுதியில் கழிப்பிடம் மற்றும் அதன் பயன்பாட்டிற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆழ்குழாய் கிணறு ஏற்படுத்தி செய்து கொடுக்க உறுதியளித்தது.
இதற்கு, கோவை ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கவிதாசன் மற்றும் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜெயலட்சுமி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

மேலும், அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கான கழிப்பிடம் மற்றும் அதற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான வசதியை செய்து கொடுக்க வேண்டுமென ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜெயலட்சுமி கேட்டுக் கொண்டதை அடுத்து, ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது சி.எஸ்.ஆர் திட்டப்பணிகளின் கீழ் ரூபாய் 7.50 லட்சம் செலவில் மாணவர்கள் விடுதியில் கழிப்பிடம் மற்றும் அதன் பயன்பாட்டிற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆழ்குழாய் கிணறு ஏற்படுத்தி செய்து கொடுக்க உறுதியளித்தது.
இதற்கு, கோவை ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கவிதாசன் மற்றும் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜெயலட்சுமி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.