பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் - கோவையில் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒரிசா மக்களின் வாக்கிற்காகவும், வடநாட்டு மக்களின் வாக்கு வங்கிக்காகவும் தமிழர்களை திருடர்கள் என்று பிரதமர் மோடி இழிவு படுத்தி இருப்பதாக தந்தை பெரியார் திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: ஒரிசாவில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற பிரச்சாரத்தில் மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, பூரி ஜெகன்நாதர் கோவிலில் உள்ள பொக்கிஷ அறைகள் பூட்டப்பட்ட சாவி காணவில்லை. அதனை கொண்டு சென்று விட்டார்கள் என்பது போன்று பேசியிருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலகம் முன்பு அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மே.23 நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், சிபிஐ உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டு மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துமுழக்கங்களை எழுப்பினர்.



தொடர்ந்து பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், மோடி தமிழர்களை திருடர்கள் என்பது போல பேசி இருப்பதாக கூறினார். ஒரிசா மாநில முதல்வருக்கு ஆலோசகராக இருக்கக்கூடியவர் பாண்டியன் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியை மோடியால் எதிர்கொள்ள முடியாமல், ஒவ்வொரு நாளும் மதம்,சாதி, மொழி பிரிவினை என்று அனைத்து வகையிலும் பேசி மக்களை கூறு போடுவதாக தெரிவித்தார். வாக்கு ஆதாயத்திற்காக I.N.D.I.A கூட்டணியின் மீது பழி சுமத்தி பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும் விமர்சித்தார்.



உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரிசாவை மண்ணின் மைந்தர்கள் தான் ஆள வேண்டும் தமிழன் ஆளக்கூடாது என்பது போல பேசி இருப்பதாக தெரிவித்த இராமகிருட்டிணன், மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் தமிழில் திருக்குறளையும், பாரதியார் கவிதைகளையும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றெல்லாம் கூறி காசி தமிழ் சங்கமம் என்று ரயிலை எல்லாம் விட்டு விட்டு மக்களை ஏமாற்றி தற்பொழுது ஒரிசா மக்களின் வாக்கிற்காகவும், வடநாட்டு மக்களின் வாக்கு வங்கிக்காகவும் தமிழர்களை திருடர்கள் என்று இழிவு படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.



மேலும் தமிழக முதலமைச்சர் பிரிவினை பேசுகிறார் என்று மோடி விமர்சித்ததாக கூறிய அவர், ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கு தகுந்தார் போல் பேசி வரக்கூடிய மோடி நிச்சயமாக தோல்வியை சந்திப்பது உறுதி என்று தெரிந்த பின்னர், ஒவ்வொரு நாளும் மன நோயாளி போல பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

அதேபோல் பிரதமர் மோடி பெண்களை சக்தி என்று புகழ்ந்து பேசி விட்டுதற்பொழுது வடமாநிலத்திற்கு சென்று மகளிருக்கு இலவச பேருந்து பயணம் அளித்தது தவறு என்று பேசி இருப்பதாக கூறினார். தமிழர்களை இழிவு படுத்தியதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...