பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

வனபகுதிகளில் உள்ள 32 பீட் பகுதிகளில், ஒரு பீட் பகுதிக்கு ஒரு வனவர், வனக்காப்பாளர் மற்றும் இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் என நான்கு பேர் வீதம் மொத்தம் 128 வனத்துறையினர் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி மற்றும் உடுமலை அமராவதி என 6 வனச்சரங்கள் உள்ளன. இந்தப் வனபகுதிகளில் உள்ள 32 பீட் பகுதிகளில் ஒரு பீட் பகுதிக்கு ஒரு வனவர், வனக்காப்பாளர் மற்றும் இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் என நான்கு பேர் வீதம் மொத்தம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 128 வனத்துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இந்த கணக்கெடுப்பு பணியானது இன்று தொடங்கி நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு நடைபெறும் எனவும், பின்பு மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் இந்த கணக்கெடுப்பு பணி ஒப்படைக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த யானைகள் கணக்கெடுப்பில் வனத்துறையினருடன் இணைந்து தன்னார்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் வனத்துறையினர் மட்டுமே இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். தன்னார்வலர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...