உடுமலை சிறுமிகள் பாலியல் வழக்கு - சிவா தங்கும் விடுதிக்கு சீல் வைப்பு

சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட உதவியாக இருந்த சிவா தங்கும் விடுதிக்கு, உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் ஆறு வாலிபர்கள் உட்பட மூன்று சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.அதைத் தொடர்ந்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உடுமலை பகுதியைச் சேர்ந்த இரண்டு 14 வயது சிறுவர்கள், ஒரு 15 வயது சிறுவன் உட்பட 9 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட உதவியாக இருந்த தனியார் விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு சிவா தங்கும் விடுதி மேனேஜர் சாமுவேல்(60) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



அத்துடன் போலீசாரும் இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் விடுதிக்கு வருகை தருகின்ற நபர்கள் குறித்து முறையாக விசாரணை செய்யாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் தங்குவதற்கு அனுமதி அளித்து சட்டவிரோத செயலுக்கு உறுதுணையாக இருந்ததாக வரப்பட்ட, காவல்துறை மற்றும் வருவாய் துறை அறிக்கையின் அடிப்படையில் தங்கும் விதியை மூடி சீல் வைக்க உடுமலை தாசில்தார் ப. சுந்தரம் உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து இன்று உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விடுதிக்கு சீல் வைத்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...