கோவை 86-வது வார்டு புள்ளுக்காடு பகுதியில் குடிநீர் பிரச்சனை - பகுதிமக்கள் திடீர் சாலை மறியல்

குடிநீர் பிரச்சனை பற்றி பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத கோவை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் இன்று (மே.22) புல்லுக்காடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி 86-வது வார்டு புல்லுக்காடு பகுதியில் குண்டும், குழியுமான சாலைகளை பராமரிக்க வேண்டும் என்றும், குப்பைகளால் ஏற்பட்ட சுகாதார சீர்கேடை சரிசெய்ய வலியுறுத்தியும் பலமுறை கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கைகள் வைத்த நிலையில், கடந்த பல நாட்களாக புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் குடிநீர் வினியோகமும் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



இதனால் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத கோவை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் இன்று (மே.22) புள்ளுகாடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தகவலறிந்து வந்த கோவை உக்கடம் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...