கோவை 86-வது வார்டு புள்ளுக்காடு பகுதியில் குடிநீர் பிரச்சனை - பகுதிமக்கள் திடீர் சாலை மறியல்

குடிநீர் பிரச்சனை பற்றி பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத கோவை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் இன்று (மே.22) புல்லுக்காடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி 86-வது வார்டு புல்லுக்காடு பகுதியில் குண்டும், குழியுமான சாலைகளை பராமரிக்க வேண்டும் என்றும், குப்பைகளால் ஏற்பட்ட சுகாதார சீர்கேடை சரிசெய்ய வலியுறுத்தியும் பலமுறை கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கைகள் வைத்த நிலையில், கடந்த பல நாட்களாக புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் குடிநீர் வினியோகமும் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



இதனால் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத கோவை மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் இன்று (மே.22) புள்ளுகாடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தகவலறிந்து வந்த கோவை உக்கடம் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...