கோவை மாவட்டத்தில் 721.1 மில்லி மீட்டர் மழை பதிவு - சராசரி அளவாக 31.35 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை விமான நிலையம் 41.3 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 31.2 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 6.4 மி.மீ உட்பட கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 721.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் 31.35 மி.மீ. மழை சராசரி அளவாக பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனிடையே மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழை அளவு விவரத்தை பேரிடர் மேலாண்மைத்துறை இன்று மே.22 வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவை விமான நிலையம் 41.3 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 31.2 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 6.4 மி.மீ, மேட்டுப்பாளையம் 0 மி.மீ, பில்லூர் அணை 0 மி.மீ, அன்னூர் 0 மி.மீ, கோவை தெற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 56 மி.மீ, சூலூர் 25.2 மி.மீ, வாரப்பட்டி 80 மி.மீ, தொண்டாமுத்தூர் 23 மி.மீ, சிறுவாணி அடிவாரம் 26 மி.மீ, மதுக்கரை தாலுகா 14 மி.மீ, போத்தனூர் ரயில் நிலையம் 6 மி.மீ, பொள்ளாச்சி 52 மி.மீ, மக்கினாம்பட்டி 82 மி.மீ, கிணத்துக்கடவு தாலுகா 17 மி.மீ, ஆனைமலை தாலுகா 23 மி.மீ, ஆழியாறு 146 மி.மீ, சின்கோனா 19 மி.மீ, சின்னக்கல்லார் 28 மி.மீ, வால்பாறை பி ஏ பி 14 மி.மீ, வால்பாறை தாலுகா 16 மி.மீ, சோலையார் 12 மி.மீ என கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 721.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் 31.35 மி.மீ. சராசரி அளவாக மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...