வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி மைவாடி பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில் பட்டு விவசாயிகள் மனு

கடந்த நான்கு மாதங்களாக நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக 30 சதவீதம் பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பட்டு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில் திரண்ட விவசாயிகள் பட்டு விவசாயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, வறட்சி நிவாரணம் வழங்க கோரிக்கை.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மைவாடி பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில், தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்கம் சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட பட்டுக்கூடு உற்பத்தி செய்து வரும் விவசாயிகள் ஒன்று திரண்டனர். பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில்,உதவி இயக்குனர் மனிஷாவிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.



அதில், தமிழகம் முழுவதும் 25,000 மேற்பட்ட விவசாயிகள் பட்டு விவசாயம் செய்து பட்டுக்கூடு உற்பத்தி செய்து வருவதாகவும், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் வேலை செய்து பயன் அடைந்து வருவதாகவும், இந்த தொழிலுக்கு அடிப்படையான வீரியம் இல்லாத பட்டுப்புழுக்களால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களாக நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக 30 சதவீதம் பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளில் முழுமையாக தோல்வி அடைந்ததாகவும். இதற்கான காப்பீடு முன்னுக்கு பின் முரணாக உள்ளது எனவும் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பட்டு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் கணக்கீடு செய்தும், உற்பத்தி பாதித்த விவசாயிகளுக்கு ஒரு மூட்டை தொகுதிக்கு ரூ.நானூறு வீதம் கொடுத்து உதவுமாறு தமிழக அரசையும், பட்டு வளர்ச்சித் துறையும் கேட்டுக் கொள்வதாகவும் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...