கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல் - மதுரை நீதிமன்றம் உத்தரவு

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிபதி செங்கமல செல்வன் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.


கோவை: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், மே 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டபோது கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கில், சவுக்கு சங்கர் மே 7ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.

கஞ்சா வைத்திருந்ததாக தேனியில் கைது செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரிடம் காவல் துறை விசாரணை நடத்த அனுமதி கோரி போலீசாரும், இந்த வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், இதுதொடர்பான விசாரணைக்காக, கோவையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (மே 20) சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணை நீதிபதி செங்கமல செல்வன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, சவுக்கு சங்கரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கை நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, பெண் காவல்துறை பாதுகாப்புடன் அவர் அழைத்து செல்லப்பட்டார்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...