கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு கூட்டம்

மறுதேர்வில் முழு ஈடுபாட்டுடன் பயின்று தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் மேற்படிப்பினை தொடர வேண்டும் என்று பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிராபகரன் அறிவுரை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், நடைபெற்ற மேல்நிலை பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் இன்று (20.05.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பேசியதாவது, பிளஸ்-2 பொதுத்தேர்வில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு வகுப்புகள் கடந்த 10.05.2024 முதல் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.

மேலும், வருகின்ற 26.06.2024 நடைபெறவுள்ள மறுதேர்வில் முழு ஈடுபாட்டுடன் பயின்று தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் மேற்படிப்பினை தொடர வேண்டும். கல்வி என்பது மிகவும் இன்றியமையாதவை ஆகும். கல்வி ஒன்று மட்டும் தான் இறுதி வரை நமது கூடவே இருப்பது ஆகும்.

எனவே, கல்விக்கு அதிகப்படியான முக்கியத்துவத்தினை மாணவ, மாணவியர்கள் அளித்து வாழ்வில் மென்மேலும் உயர வேண்டுமென தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 17 மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.மாணவ, மாணவியர்களுக்கு கல்வித்துறையின் சார்பில் கல்வி தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.செல்வசுரபி, மாநகராட்சி கல்வி அலுவலர் தாமஸ் சேவியர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...