கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு கூட்டம்

மறுதேர்வில் முழு ஈடுபாட்டுடன் பயின்று தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் மேற்படிப்பினை தொடர வேண்டும் என்று பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிராபகரன் அறிவுரை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், நடைபெற்ற மேல்நிலை பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் இன்று (20.05.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பேசியதாவது, பிளஸ்-2 பொதுத்தேர்வில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு வகுப்புகள் கடந்த 10.05.2024 முதல் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.

மேலும், வருகின்ற 26.06.2024 நடைபெறவுள்ள மறுதேர்வில் முழு ஈடுபாட்டுடன் பயின்று தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் மேற்படிப்பினை தொடர வேண்டும். கல்வி என்பது மிகவும் இன்றியமையாதவை ஆகும். கல்வி ஒன்று மட்டும் தான் இறுதி வரை நமது கூடவே இருப்பது ஆகும்.

எனவே, கல்விக்கு அதிகப்படியான முக்கியத்துவத்தினை மாணவ, மாணவியர்கள் அளித்து வாழ்வில் மென்மேலும் உயர வேண்டுமென தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 17 மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.மாணவ, மாணவியர்களுக்கு கல்வித்துறையின் சார்பில் கல்வி தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.செல்வசுரபி, மாநகராட்சி கல்வி அலுவலர் தாமஸ் சேவியர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...