கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு கூட்டம்

மறுதேர்வில் முழு ஈடுபாட்டுடன் பயின்று தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் மேற்படிப்பினை தொடர வேண்டும் என்று பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிராபகரன் அறிவுரை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், நடைபெற்ற மேல்நிலை பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் இன்று (20.05.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பேசியதாவது, பிளஸ்-2 பொதுத்தேர்வில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு வகுப்புகள் கடந்த 10.05.2024 முதல் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.

மேலும், வருகின்ற 26.06.2024 நடைபெறவுள்ள மறுதேர்வில் முழு ஈடுபாட்டுடன் பயின்று தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் மேற்படிப்பினை தொடர வேண்டும். கல்வி என்பது மிகவும் இன்றியமையாதவை ஆகும். கல்வி ஒன்று மட்டும் தான் இறுதி வரை நமது கூடவே இருப்பது ஆகும்.

எனவே, கல்விக்கு அதிகப்படியான முக்கியத்துவத்தினை மாணவ, மாணவியர்கள் அளித்து வாழ்வில் மென்மேலும் உயர வேண்டுமென தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 17 மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.மாணவ, மாணவியர்களுக்கு கல்வித்துறையின் சார்பில் கல்வி தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.செல்வசுரபி, மாநகராட்சி கல்வி அலுவலர் தாமஸ் சேவியர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...