உடுமலை அருகே மீன்கள் மற்றும் கன்று குட்டிகள் இறப்பு - குடிநீர் மாசடையும் அபாயம்

உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இன்று ஆயிரக்கணக்கான மீன்களும் ஒரு கன்றுகுட்டியும் மர்மமாக இறந்து கரை ஒதுங்கின. இதனால் குடிநீர் மாசடையும் அபாயமும் நிலவுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. மேலும் உடுமலை நகராட்சி மற்றும் குடிமங்கலம், மடத்துக்குளம், சங்கரமநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் பயன்பெறும் வகையில் குடிநீர் வினியோகமும் நடைபெற்று வருகிறது. அத்துடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் அணையில் கட்லா,ரோகு, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் வளர்ப்பும் நடைபெற்று வருகிறது.

நடப்பு ஆண்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கோடை வெப்பம் தாக்கம் காரணமாக அணையில் நீர் இருப்பு வேகமாக சரிந்து வந்தது. இருப்பு உள்ள தண்ணீரை வைத்து சுற்றுப்புற கிராமங்களுக்கு நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மர்மமான முறையில் திருமூர்த்தி அணையில் வளர்ந்து வருகின்ற ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. அவற்றை பறவைகளும், நாய்கள் உள்ளிட்ட விலங்குகளும் உணவாகக் கொண்டு வருகின்றன.



அரைகுறையான உடலுடன் அணை பகுதி முழுவதும் ஆங்காங்கே மீன்கள் செத்துக் கிடப்பதால் கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. அத்துடன் குடிநீரும் மாசுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மர்ம நபர்கள் கைவரிசை காட்டியதன் விளைவாக மீன்கள் இறந்ததா? அல்லது தண்ணீர் மாசுபாட்டால் இறந்ததா என விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. மீன்கள் இறந்து வருவதால் மீனவர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.



இதே போன்று கன்று குட்டி சடலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. அவற்றை அகற்றுவதற்கும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அணை நீரை குடிநீர் ஆதாரமாகக் கொண்ட பொதுமக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

எனவே திருமூர்த்தி அணை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ள மீன்கள் மற்றும் கன்று குட்டியை அகற்றி தண்ணீரை தூய்மைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மீன்கள் இறப்பு குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...