கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என் கல்லூரி கனவு வழிகாட்டு நிகழ்ச்சி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற என் கல்லூரி கனவு நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


கோவை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு எனும் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கும், அவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் பல்வேறு ஆலோசனைகள்வழங்கப்படுகின்றன.



மேலும் கல்லூரியில் அரசினுடைய உதவி எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு பல்வேறு ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் என் கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று மே.18 நடைபெற்றது.



இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வில் மாவட்டஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை, தாட்கோ மாவட்ட மேலாளர் மகேஸ்வரி உட்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...