கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என் கல்லூரி கனவு வழிகாட்டு நிகழ்ச்சி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற என் கல்லூரி கனவு நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


கோவை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு எனும் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கும், அவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் பல்வேறு ஆலோசனைகள்வழங்கப்படுகின்றன.



மேலும் கல்லூரியில் அரசினுடைய உதவி எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு பல்வேறு ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் என் கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று மே.18 நடைபெற்றது.



இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வில் மாவட்டஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை, தாட்கோ மாவட்ட மேலாளர் மகேஸ்வரி உட்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...