கோவை மாவட்டத்தில் 605.6 மில்லி மீட்டர் மழை பதிவு - பேரிடர் மேலாண்மைத்துறை அறிவிப்பு

விமான நிலையம் 41.30 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 27 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 21.4 மி.மீ, மேட்டுப்பாளையம் 30.5 மி.மீ, பில்லூர் அணை 170 மி.மீ என கோவை மாவட்டம் முழுவதும் நேற்று மொத்தமாக 605.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான நிலை நிலவுகிறது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழை அளவு விவரத்தை பேரிடர் மேலாண்மைத்துறை இன்று மே.18 வெளியிட்டுள்ளது.



அதன்படி, கோவையின் பல்வேறு சுற்றுவட்டாரங்களில் நேற்று பெய்த மழை அளவு, விமான நிலையம் 41.30 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 27 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 21.4 மி.மீ, மேட்டுப்பாளையம் 30.5 மி.மீ,பில்லூர் அணை 170 மி.மீ, அன்னூர் 4.2 மி.மீ, கோவை தெற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 4 மி.மீ, சூலூர் 33 மி.மீ, வாரப்பட்டி 23 மி.மீ, தொண்டாமுத்தூர் 50 மி.மீ, சிறுவாணி அடிவாரம் 24 மி.மீ,மதுக்கரை தாலுகா 8 மி.மீ,போத்தனூர் ரயில் நிலையம் 10 மி.மீ, பொள்ளாச்சி 6 மி.மீ, மக்கினாம்பட்டி 7 மி.மீ,கிணத்துக்கடவு தாலுகா 31 மி.மீ, ஆனைமலை தாலுகா 1.2 மி.மீ, ஆழியாறு 51 மி.மீ, சின்கோனா 34 மி.மீ, சின்னக்கல்லார் 25 மி.மீ, சோலையார் 4 மி.மீ என கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 605.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் 26.33 மி.மீ., சராசரி அளவாக மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...