திருப்பூரில் வெளுத்து வாங்கும் கனமழை - சாலைகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

திருப்பூர் மாநகரை சுற்றியுள்ள பெருமாநல்லூர் சாலை, காங்கேயம் சாலை, தாராபுரம் சாலை, மங்கலம் சாலை என பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்கு வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திருப்பூர் மாநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அவ்வப்பொழுது லேசான மழை இருந்து வந்தது.

இந்தநிலையில் வானிலை ஆய்வு மையம் திருப்பூரில் 17ம் தேதி கனமழை செய்யும் எனவும், அதற்காக மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது.

மதியத்திற்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழையானது பெய்யத் தொடங்கியது.



திருப்பூர் மாநகரை சுற்றியுள்ள பெருமாநல்லூர் சாலை, காங்கேயம் சாலை, தாராபுரம் சாலை, மங்கலம் சாலை என பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.



இந்த கன மழை காரணமாக சாலைகளில் மழைநீரானது கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். அதுமட்டுமின்றி இந்த கன மழை காரணமாக சாலையோர கடைகளில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் அங்கு வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலில் தாக்கம் குறைந்து திருப்பூர் மாநகர் பகுதிகளில் தற்பொழுது கனமழை பெய்து வருவது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...