கோவை நவ இந்தியா ஜங்சன் அருகே கல்லூரி மாணவனின் காரில் இருந்த செல்போன் மற்றும் பணம் திருட்டு

காரை உரசிவிட்டு பின்னர் வாக்குவாதம் செய்து, காரின் முன் இருக்கையில் இருந்த செல்போன் மற்றும் 700 ரூபாய் பணத்தை பைக்கில் வந்த நபர் திருடிச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து கல்லூரி மாணவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் அப்துல்கலாம் தெருவை சேர்ந்தவர் பாலகார்த்திக் (21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று மே.16 பாலகார்த்திக் பீளமேட்டில் உள்ள ஒரு கடைக்கு காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அவர் நவ இந்தியா ஜங்சன் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த பைக் கார் மீது உரசியது. இதில் பாலகார்த்திக்கிற்கும், பைக்கில் வந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார்.

இதனையடுத்து காரில் முன் இருக்கையில் வைத்திருந்த பாலகார்த்திக்கின் செல்போன் மற்றும் ரூ.700 காணவில்லை. பைக்கில் வந்த நபர் திருடி சென்றதாக தெரிகிறது. பின்னர் இது குறித்து பாலகார்த்திக் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...