கெம்பனூரில் 300 வருடம் பழமையான அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூரில் 300 வருடம் பழமையான அரச மரம், பலத்த காற்றுக்குப் பின், சாய்ந்து விழுந்தது.



Coimbatore: தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூரில் வீசிய காற்றின் காரணமாக சுமார் 300 ஆண்டுகள் பழமையான அரச மரம் வேரோடு சாய்ந்து. தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூரில் உள்ள பேருந்து நிலையம் அருகில் சுமார் 300 ஆண்டு பழமையான அரச மரத்தின் அடியே விநாயகர் சிலை வைத்து ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த ஊரில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த அரச மரத்தின் அடியில் இளைப்பாறுவது உண்டு.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று (மே.15) மாலை காற்று வீசியபோது சுமார் 300 ஆண்டுகள் பழமையான அரசமரம் வேரோடு சாய்ந்தது. சாலையில் குறுக்கே விழுந்தது. 

அதிர்ஷ்டவசமாக அப்போது மரத்தடி திணையில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மின்கம்பம் முறிந்து சேதம் அடைந்தது. மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சரத்தை துண்டித்தனர். பின்னர் விரைந்து வந்து வருவாய் துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். 

ஊர் மக்களின் அடையாளமாக இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...