ஓடையகுளம் பகுதியில் சூறை காற்றில் வாழை மரங்கள் சேதம் - அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு

பெரிய அளவில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.



இந்தநிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மற்றும் ஓடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாறைப்பதி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சுமார் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள வாழை மரங்கள் சேதம் அடைந்தன.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட வாழை தோட்டங்களை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.



இதன் அடிப்படையில் இன்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஓடையகுளம் பகுதியில் பாதிக்கப்பட்ட வாழை தோட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, இந்த பகுதியில் பெரிய அளவில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மரங்கள் குறித்து ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை சமர்பித்த பிறகு முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் வாழைப் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் பெறுவதில் உள்ள சிக்கல்களை களைந்து அதிகாரிகளுடன் பேசி இன்சூரன்ஸ் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், ஆனைமலை உப்பாற்றங் கரையில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ள ஆற்றை பார்வையிட்டார். பின்னர் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.



இதில் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளார்கள், தேவ சேனாதிபதி, யுவராஜ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்ககுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...