தாராபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

தனியார் பள்ளி வாகனங்களில் பிரேக் சரியாக உள்ளதா, கதவுகள் சரியாக இயங்குகிறதா, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி உள்ளதா, அவசரகால கதவுகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம், குண்டடம், மூலனூர் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் சுமார் 210 பள்ளி பேருந்துகள் இயங்கி வருகின்றன.



தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.



வருவாய் கோட்டாட்சியர் செந்தில்அரசன், தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சி.செந்தில் குமார், திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வி அதிகாரி ஆனந்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெ.செந்தில்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

மொத்தம் 184 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வாகனங்களில் பிரேக் சரியாக உள்ளதா, கதவுகள் சரியாக இயங்குகிறதா, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி உள்ளதா, அவசரகால கதவுகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



வாகன ஓட்டுனர்களின் (டிரைவிங் லைசென்ஸ்) ஓட்டுனர் உரிமம் மற்றும் அவர்களின் உடல் தகுதி திறனும் ஆய்வு செய்யப்பட்டது.



அவசரகால மீட்புப் பணி குறித்து ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர். இன்று நடைபெற்ற ஆய்வில் 3 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யபட்டது என வட்டார போக்குவரத்து அலுவலர் சி.செந்தில்குமார் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...