வெள்ளகோவில் அருகே கோர்ட் ஊழியரின் கணவர் தாக்கியதில் ஒருவருக்கு மண்டை உடைப்பு - மருத்துவமனையில் அனுமதி

மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்வதாக காவல்நிலைத்தில் புகார் அளித்ததால், ஆத்திரமடைந்த நீதிமன்ற ஊழியரின் கணவன் உறவினருடன் சென்று, சக்திவேல் என்வரின் மண்டையை உடைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளகோவில் அருகே உள்ளது லக்கமநாயக்கன்பட்டி. இங்கு வசித்து வருபவர் சக்திவேல் கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வித்யா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இவர்களது வீட்டின் அருகே குடியிருந்து வருபவர் ரமேஷ் அவருக்கு அமுதா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளது. அமுதா நீதிமன்றத்தில் பணிபுரிவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சக்திவேல் மனைவி வித்யாவிடம் ரமேஷ்குமார் தவறாக நடக்க பலமுறை முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சக்திவேலிடம் வித்யா கூறியதைத் தொடர்ந்து சக்திவேல் ரமேஷ்குமாரை தொலைப்பேசியில் அழைத்து பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டிற்க்கே வந்து மிரட்டியும் சென்றுள்ளார்.

இதுகுறித்து சக்திவேல் வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த காவலர்கள் ரமேஷ்குமாரை எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ரமேஷ்குமார் உறவினர் லோகேஷை அழைத்துக்கொண்டு நேற்று இரவு சக்திவேல் வீட்டு கதவை கடப்பாரை கொண்டு உடைத்து உள்ளே நுழைந்து சக்திவேலின் மண்டையை உடைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மனைவி வித்யா மற்றும் குழந்தைகளையும் கீழே தள்ளிவிட்டு நீ எந்த காவல்நிலையம் சென்று புகார் கொடுத்தாலும், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. என் மனைவி அமுதா நீதிமன்றத்தில் வேலை செய்து வருகின்றாள் என கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக வித்யா புகார் தெரிவித்துள்ளார்.

காயம்பட்ட சக்திவேலுவை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைஅளித்த பின் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிச்சைபெற்று வருகிறார்.

இது குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ரமேஷ் தன்னையும் தாக்கி விட்டதாகக் கூறி காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு முதல் சிகிச்சை பெற்று வருகிறார். நீதிமன்றத்தில் தனது மனைவி பணியாற்றுகின்றார் என்று அருகில் உள்ள வீட்டில் இருக்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சிப்பது தவறானது என்று காவல்துறை புகார் கொடுத்தவுடன் நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது அடிதடி பிரச்சனை நடந்திருக்க ஏற்பட்டிருக்காது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இரு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...