கோவை சாய்பாபா காலனி பகுதியில் போதை மாத்திரை, போதை மருந்து கடத்தல் – 3 பேர் கைது

2 கிராம் போதை மருந்து, 100 கிராம் எடை கொண்ட 1000 போதை மாத்திரைகள், 100 கிராம் கஞ்சா, 6 போதை ஊசிகள் ஆகியவற்றை கடத்தி வந்த மூன்று போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சாய்பாபா காலனி மணியம் வேலப்பன் வீதியில் நேற்று மே.13 மாலையில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 3 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர்.

அவர்களிடம் 2 கிராம் போதை மருந்து, 100 கிராம் எடை கொண்ட 1000 போதை மாத்திரைகள், 100 கிராம் கஞ்சா, 6 ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் கவுண்டம்பாளையம் சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்த குணசேகரன் (வயது 24), இடையர்பாளையம், சரவணா நகரை சேர்ந்த விஷால் என்ற சந்தோஷ் (வயது 29), வெங்கிட்டபுரம், சாஸ்திரி ரோடுதுரைசாமி என்பது தெரிய வந்தது.

இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. 2 பைக்குகள், போதை மருந்து, மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...