கோவை சாய்பாபா காலனி பகுதியில் போதை மாத்திரை, போதை மருந்து கடத்தல் – 3 பேர் கைது

2 கிராம் போதை மருந்து, 100 கிராம் எடை கொண்ட 1000 போதை மாத்திரைகள், 100 கிராம் கஞ்சா, 6 போதை ஊசிகள் ஆகியவற்றை கடத்தி வந்த மூன்று போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சாய்பாபா காலனி மணியம் வேலப்பன் வீதியில் நேற்று மே.13 மாலையில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 3 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர்.

அவர்களிடம் 2 கிராம் போதை மருந்து, 100 கிராம் எடை கொண்ட 1000 போதை மாத்திரைகள், 100 கிராம் கஞ்சா, 6 ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் கவுண்டம்பாளையம் சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்த குணசேகரன் (வயது 24), இடையர்பாளையம், சரவணா நகரை சேர்ந்த விஷால் என்ற சந்தோஷ் (வயது 29), வெங்கிட்டபுரம், சாஸ்திரி ரோடுதுரைசாமி என்பது தெரிய வந்தது.

இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. 2 பைக்குகள், போதை மருந்து, மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...