சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி

சவுக்கு சங்கரை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளார்.


கோவை: சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க கடந்த வாரம் காவல்துறை சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று மே.13 காலை சவுக்கு சங்கரை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபாபு சவுக்கு சங்கரை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு அனுமதி அளித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை 15 நிமிடம் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் சந்திக்க அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...