கோவையின் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை

அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 692 கடைகளில் இருந்து 3098.38 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி, கோவை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கோவை மாவட்ட காவல் துறை மற்றும் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் இணைந்து 23 சிறப்பு குழுக்கள் தமிழக அரசால் அமைக்கப்பட்டு கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று மே.11 சோதனை மேற்கொண்டனர்.

அதன்படி பீளமேடு, கணபதி, போத்தனூர், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி, சிங்காநல்லூர்', காளப்பட்டி, அவிநாசி ரோடு, காந்திபுரம், வடவள்ளி, ரேஸ் கோர்ஸ், ராமநாதபுரம் மற்றும் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்தூர், அன்னூர், எஸ்.எஸ்குளம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, ஆனைமலை, வால்பாறை போன்ற பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு சிறப்பு கூட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி 5,568 கடைகளில் திடீர் கூட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது 692 கடைகளில் சுமார் 3098.38 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளான பான்மசாலா மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்காவின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய் 30,63,804 ஆகும்.

மேலும் களஆய்வின் முடிவில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருள் பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்த முதல் முறை குற்றம்புரிந்த 683 கடைகளுக்கு அபராதமாக தலா ரூபாய்25,000 வீதம் மற்றும் அவர்களது கடையில் வணிகம் மேற்கொள்ள 15 நாட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூபாய். 17,07,5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் முறை குற்றம் புரிந்த 8 கடைகளுக்கு கடைகளுக்கு அபராதமாக ரூ.50,000/- வீதம் மொத்தம் ரூபாய்.4,00,0000/- அபராதம் விதிக்கப்பட்டு மற்றும் அவர்களது கடையில் வணிகம் மேற்கொள்ள 30 நாட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வணிகம் மேற்கொள்வது கண்டறிய நேரிட்டால் 94440-42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...