உடுமலையில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி துவக்கம் - 24 அணிகள் பங்கேற்பு

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் காந்திகிராமம் பல்கலைக்கழக அணியும், தாராபுரம் கூடைப்பந்து அணியும் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 80-82 என்ற புள்ளிகள் கணக்கில் காந்திகிராமம் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உடுமலை கூடைப்பந்து அகடாமி சார்பில் மாநில அளவிலான கூடை பந்து போட்டி இன்று துவங்கியது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் காந்திகிராமம் பல்கலைக்கழக அணியும், தாராபுரம் கூடைப்பந்து அணியும் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 80-82 என்ற புள்ளிகள் கணக்கில் காந்திகிராமம் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.



இரண்டாவது போட்டியில் கொங்குநாடு கூடைப்பந்து அணியும், பொள்ளாச்சி கூடை பந்து அணியும் மோதின. இதில், 51- 61 என்ற புள்ளி கணக்கில் பொள்ளாச்சி கூடைப்பந்து கழகம் அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ராயல் கூடை பந்து கழகம் அணியும் வத்தலகுண்டு கூடை பந்து அணியும் மோதியது.

இதில் 76 -67 என்ற புள்ளி கணக்கில் ராயல் கூடை பந்து கழகம் அபார வெற்றி பெற்றது முதல் நாள் துவக்க விழா போட்டிகளில் திருப்பூர் மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் ரகுகுமார், யூகேபி முத்துக்குமாரசாமி, ஆர்.விஜி ஸ்போர்ட்ஸ் அகாடமி ஜூலியா சந்தோஷ், உடுமலை மார்டூரி வசந்தகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், உடுமலை கூடைப்பந்து கழகம் விஜயபாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...