கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் - அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

தங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நகர அமைப்பு அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வந்து காய்கறிகளை விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர்.



இந்த மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று (09-05-2024) காலை 10 மணியளவில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அதிகாரிகள் தொடங்கினர்.



அப்போது அங்கு வந்த வியாபாரிகள் தங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அங்கு வந்த நகர அமைப்பு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்து அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் கொடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்குகிறது என்று தெரிவித்தனர். அதற்கு எங்களுக்கு அது போன்ற நோட்டீஸ் எதுவும் கொடுக்கவில்லை என்று வியாபாரிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...