கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் - அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

தங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நகர அமைப்பு அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வந்து காய்கறிகளை விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர்.



இந்த மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று (09-05-2024) காலை 10 மணியளவில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அதிகாரிகள் தொடங்கினர்.



அப்போது அங்கு வந்த வியாபாரிகள் தங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அங்கு வந்த நகர அமைப்பு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்து அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் கொடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்குகிறது என்று தெரிவித்தனர். அதற்கு எங்களுக்கு அது போன்ற நோட்டீஸ் எதுவும் கொடுக்கவில்லை என்று வியாபாரிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...