கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் - அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

தங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நகர அமைப்பு அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வந்து காய்கறிகளை விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர்.



இந்த மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று (09-05-2024) காலை 10 மணியளவில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அதிகாரிகள் தொடங்கினர்.



அப்போது அங்கு வந்த வியாபாரிகள் தங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அங்கு வந்த நகர அமைப்பு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்து அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் கொடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்குகிறது என்று தெரிவித்தனர். அதற்கு எங்களுக்கு அது போன்ற நோட்டீஸ் எதுவும் கொடுக்கவில்லை என்று வியாபாரிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...