கோவைக்கு வரும் ரயில் சேவைகளில் 3 நாட்களுக்கு மாற்றம் - ஒரு ரயில் ரத்து

ரயில் எண்.22504 திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ், 10.05.2024 அன்று திப்ருகரில் இருந்து புறப்பட்டு 13.05.2024 அன்று கோயம்புத்தூர் வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வசதியான இடத்தில் 3 மணி நேரம் ஒழுங்குபடுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: ரயில்வே யார்டில் பணிகள் நடைபெறுவதால், கோவைக்கு வரும் ரயில்களின் சேவைகளில் மே 7, 9 மற்றும் 13 ஆம் தேதிகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அண்மையில் அறிவித்துள்ளது.

அதன்படி, ரயில் எண்.18190 எர்ணாகுளம் Jn - டாடாநகர் Jn (போத்தனூர், திருப்பூர் வழியாக) எக்ஸ்பிரஸ், 07, 09 & 13 தேதிகளில் எர்ணாகுளத்திலிருந்து காலை 7.15 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டு, கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும். மேலும், வசதியான இடத்தில் 1 மணி நேரம் ரயில் ஒழுங்குபடுத்தப்படும்.

1. ரயில் எண்.22504 திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ், 10.05.2024 அன்று திப்ருகரில் இருந்து புறப்பட்டு 13.05.2024 அன்று கோயம்புத்தூர் வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வசதியான இடத்தில் 3 மணி நேரம் ஒழுங்குபடுத்தப்படும்.

மேலும், ரயில் இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் மத்திய ரயில்நிறுத்தப்படாது. போத்தனூர் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நிறுத்தப்படும்.

2. ரயில் எண்.12626 புது தில்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ், 11.05.2024 அன்று புது தில்லியில் இருந்து புறப்பட்டு 13.05.2024 அன்று கோயம்புத்தூர் வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வசதியான இடத்தில் 1 மணிநேரம் 40 நிமிடங்களுக்கு ஒழுங்குபடுத்தப்படும். மேலும், ரயில் இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையத்தில் நிற்காது.

3. ரயில் எண்.12677 KSR பெங்களூரு-எர்ணாகுளம் Jn இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 13.05.2024 வசதியான இடத்தில் 1 மணிநேரம் ஒழுங்குபடுத்தப்படும். மேலும், ரயில் இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும்.இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் மத்தியில் நிற்காது அதற்கு பதிலாக, போத்தனூர் ரயில் நிலையத்தில் 3 நிமிடம் நிறுத்தப்படும்.

அதேநேரத்தில்,ரயில் எண். 16843 திருச்சிராப்பள்ளி ஜங்சன்- பாலக்காடு டவுன் ரயில் 10ம் தேதி திருப்பூர் ரயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும்.

திருச்சிராப்பள்ளியில் இருந்து திருப்பூருக்கு மட்டுமே ரயில் இயக்கப்படும். (10.05.2024) அன்று திருப்பூரில் இருந்து பாலக்காடு நகருக்கு இயக்கப்படாது என்று ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...