கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டி

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரம் பேர் கலந்துக்கொண்டனர்.


கோவை: கோவை டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் இந்திய சிலம்பம் அசோசியேசன் சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்கள் உள்பட சுமார் ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர்.



போட்டி நிகழ்வுகளில் ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு, சித்திரை சிலம்பம், வாள் வீச்சு மற்றும் சிலம்பு சண்டை போன்ற பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.



வீரர்களும் வீராங்கனைகளும் அவரவர் கலைக்கு ஏற்றவாறு சிலம்பத்தை சுழல திறமையை நிரூபித்தனர்.



வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிலம்பாட்ட வீரர்களுக்கு தெற்காசியா மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகளும் கிடைத்தன.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...