கோவையில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று - சில இடங்களில் லேசான மழை

இன்று மாலையில் கவுண்டம்பாளையம், துடியலூர், கணுவாய் போன்ற பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசியது. செல்வபுரம், தொண்டாமுத்தூர், உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று (04-05-2024) அக்னி நட்சத்திர வெயில் காலையிலிருந்து மதியம் வரை வெளுத்து வாங்கியது. ஆனால் மதியத்துக்கு பிறகு வெயிலானது சற்று தணிந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தொடர்ந்து கோவையில் இன்று மாலை திடீரென்று வெயிலின் தாக்கம் குறைந்து பலத்த காற்று வீச தொடங்கியது. கோவை கவுண்டம்பாளையம், துடியலூர், கணுவாய் போன்ற பல்வேறு பகுதிகளில் புழுதி காற்றுடன் கூடிய சூறாவளிக்காற்று வீசியது.செல்வபுரம், தொண்டாமுத்தூர், உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது.

மேலும் கோவையின் பெரும்பாலான இடங்களில் இன்று மே.4 பலத்த காற்று மட்டுமே வீசியது. இதன் காரணமாக கோவை மாநகரில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...