கோவையில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று - சில இடங்களில் லேசான மழை

இன்று மாலையில் கவுண்டம்பாளையம், துடியலூர், கணுவாய் போன்ற பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசியது. செல்வபுரம், தொண்டாமுத்தூர், உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று (04-05-2024) அக்னி நட்சத்திர வெயில் காலையிலிருந்து மதியம் வரை வெளுத்து வாங்கியது. ஆனால் மதியத்துக்கு பிறகு வெயிலானது சற்று தணிந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தொடர்ந்து கோவையில் இன்று மாலை திடீரென்று வெயிலின் தாக்கம் குறைந்து பலத்த காற்று வீச தொடங்கியது. கோவை கவுண்டம்பாளையம், துடியலூர், கணுவாய் போன்ற பல்வேறு பகுதிகளில் புழுதி காற்றுடன் கூடிய சூறாவளிக்காற்று வீசியது.செல்வபுரம், தொண்டாமுத்தூர், உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது.

மேலும் கோவையின் பெரும்பாலான இடங்களில் இன்று மே.4 பலத்த காற்று மட்டுமே வீசியது. இதன் காரணமாக கோவை மாநகரில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...