திமுக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்களுக்கு நன்றி கூறிய கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

மக்களவை தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள், செயல்வீரர்கள் என அனைவரையும் வரவேற்று, கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி கூறி பாராட்டி மகிழ்ந்தார்.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பில், ஒன்றிய கழக செயலாளர் C.M.கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில், தடாகம் சாலையில் உள்ள சி.எம்.கே ஹாலில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரையும் வரவேற்று, கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று (மே.4) சந்தித்து நன்றி கூறி பாராட்டி மகிழ்ந்தார்.



உடன் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் T.P.சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு, MNK.செந்தில், ஆனைகட்டி மதன், நெசவாளர் அணி அமைப்பாளர் நட்ராஜ், இளைஞர் அணி சூரியன் தம்பி, மனோஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.

இதேபோல், கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில், துடியலூர் பகுதி கழக அலுவலகத்தில், பகுதி கழக செயலாளர் சரத் விக்னேஷ் ஏற்பாட்டில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரையும் இன்று (மே.4) சந்தித்து கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி கூறி பாராட்டி மகிழ்ந்தார்.



உடன் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் T.P.சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு, முன்னாள் நகராட்சி தலைவர் சுந்தரம், இளைஞரணி மனோஜ், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...