தாராபுரத்தில் 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - பெண் உட்பட இருவர் கைது

தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு சட்ட விரோதமாக புகையிலை பொருள்களை விற்பனைக்கு எடுத்து வந்த சவுதா கனி என்ற பெண்ணையும், முகமது ரஃபீக் என்ற நபரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 12 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தாராபுரம் நகரின் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சவுதா கனி வயது 35, இவரது கணவர் சையது இப்ராகிம். மேலும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் வயது 47 என்ற நபரும் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர். சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண் உட்பட இரண்டு பேரையும் தாராபுரம் காவல் உதவியாளர் சிவராஜ் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருள்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி சட்ட விரோதமாக புகையிலை பொருள்களை விற்பனைக்கு எடுத்து வந்த சவுதா கனி என்ற பெண்ணையும் முகமது ரஃபீக் என்ற நபரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...