குற்றப்பிரிவு ஆய்வாளர் மீனா குமாரியின் செயல்களை வெளிப்படுத்திய ஜூனியர் ரிப்போர்ட்டர் மீது தொடரும் பாதுகாப்பு பிரச்சனை

கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் மீனா குமாரி என்ற முன்னாள் குற்றப்பிரிவு ஆய்வாளர் மீது குற்றங்களை வெளிப்படுத்திய குருஸ் முத்து பிரிண்ஸ் அண்மையில் பல அசவுரியங்களையும், மிரட்டல்களையும் எதிர்கொண்டார். மே 2ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.


கோவை: கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் முன்னாள் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணி புரிந்த மீனா குமாரி மீது பல திடுக்கிட வைக்கும் உண்மை குற்றங்களை ஜூனியர் ரிப்போர்ட்டர் மாதம் இருமுறை இதழின் இணை ஆசிரியர் குருஸ் முத்து பிரிண்ஸ், மாதம் இருமுறை இதழில் அண்மையில் வெளியிட்டிருந்தார்.


அதன் பிறகு மீனா குமாரி ஆய்வாளரால் பல அசவுரியங்களும், மிரட்டல்களும் பல விதங்களில் வருவதால் குருஸ் முத்து பிரிண்ஸ் தனது உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறை தலைவரிடம் அண்மையில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார்.


அந்த புகார் தொடர்பான விசாரணை இன்று (மே.2) கோவை ரத்தினபுரி காவல் நிலைய ஆய்வாளர் மேற்பார்வைக்கு வந்திருந்தது.


பின்னர் விசாரணைக்கு புகார் தாரரான ஜூனியர் ரிப்போர்ட்டர் மாதம் இருமுறை இதழின் இணை ஆசிரியர் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அப்போது எதிர் மனுதாரரும் காவல்துறை ஆய்வாளருமான மீனா குமாரி ஆஜராகாமல் தட்டிக் கழித்து இருந்தார்.


இந்த விசாரணைக்கு பின் பிரின்ஸ் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் காவல்துறையினர் திட்டமிட்டு எனது புகார் மனுவை தட்டி கழித்து ஆய்வாளர் மீனா குமாரியை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு ஒரு ஆய்வாளர் மீது கொடுத்த புகாரினை மற்றொரு ஆய்வாளர் விசாரிக்க பணித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Newsletter

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...