சமூக ஊடகங்களில் பரவும் பில்லூர் அணையின் நீர் தடைப்படுவதாகக் கூறும் தகவல்கள் பொய்யானவை

அவசரகால நிலைமையை சமாளிக்க இனி மெயின் குழாயில் வரும் குடிநீரை மேல்நிலை தொட்டியில் ஏற்றி அதே இடத்தில் பொது குழாய்கள் அமைத்து, பொதுமக்கள் நீரை குடிக்க மட்டும் பயன்படுத்த அனைத்து இடங்களிலும் விரைவில் அறிவுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி வதந்தி என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி விளக்கமளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியிலிருந்து அவலாஞ்சி, எமரால்டு, குந்தா அணைகளின் வாயிலாக கெத்தை அணைக்கு தண்ணீர் வந்து, அங்கிருந்து பர்லியாறு நீர்தேக்கம் வழியாக பில்லூர் அணைக்கு நீர் வருகிறது. அதேபோல், கேரளாவில் இருந்து இயற்கையான நீர் வழித்தடங்கள் மூலமும் பில்லூர் அணைக்கு தண்ணீர் வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள சூழலில், பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது.

இதனால் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம் 100 அடி என்றாலும், 40 அடி வரை அணையில் சேறும், சகதியுமாக தான் உள்ளது. 41-வது அடியிலிருந்து தான் நீர் உள்ளது. நேற்றைய நிலவரப்படி பில்லூர் அணையில் 55 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அதாவது, 15 அடிக்கு மட்டுமே நீர் இருப்பில் உள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்ட சப்ளை அடியோடு நிறுத்தப்படலாம், அவசரகால நிலைமையை சமாளிக்க மெயின் குழாயில் வரும் குடிநீரை மேல்நிலை தொட்டியில் ஏற்றி அதே இடத்தில் பொதுகுழாய்கள் அமைத்து, பொதுமக்கள் நீரை குடிக்க மட்டும் பயன்படுத்த அனைத்து இடங்களிலும் விரைவில் அறிவுறுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. இந்த செய்தி ஒரு வதந்தி என்றும், இதுபோன்று போலி செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...