சமூக ஊடகங்களில் பரவும் பில்லூர் அணையின் நீர் தடைப்படுவதாகக் கூறும் தகவல்கள் பொய்யானவை

அவசரகால நிலைமையை சமாளிக்க இனி மெயின் குழாயில் வரும் குடிநீரை மேல்நிலை தொட்டியில் ஏற்றி அதே இடத்தில் பொது குழாய்கள் அமைத்து, பொதுமக்கள் நீரை குடிக்க மட்டும் பயன்படுத்த அனைத்து இடங்களிலும் விரைவில் அறிவுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி வதந்தி என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி விளக்கமளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியிலிருந்து அவலாஞ்சி, எமரால்டு, குந்தா அணைகளின் வாயிலாக கெத்தை அணைக்கு தண்ணீர் வந்து, அங்கிருந்து பர்லியாறு நீர்தேக்கம் வழியாக பில்லூர் அணைக்கு நீர் வருகிறது. அதேபோல், கேரளாவில் இருந்து இயற்கையான நீர் வழித்தடங்கள் மூலமும் பில்லூர் அணைக்கு தண்ணீர் வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள சூழலில், பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது.

இதனால் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம் 100 அடி என்றாலும், 40 அடி வரை அணையில் சேறும், சகதியுமாக தான் உள்ளது. 41-வது அடியிலிருந்து தான் நீர் உள்ளது. நேற்றைய நிலவரப்படி பில்லூர் அணையில் 55 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அதாவது, 15 அடிக்கு மட்டுமே நீர் இருப்பில் உள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்ட சப்ளை அடியோடு நிறுத்தப்படலாம், அவசரகால நிலைமையை சமாளிக்க மெயின் குழாயில் வரும் குடிநீரை மேல்நிலை தொட்டியில் ஏற்றி அதே இடத்தில் பொதுகுழாய்கள் அமைத்து, பொதுமக்கள் நீரை குடிக்க மட்டும் பயன்படுத்த அனைத்து இடங்களிலும் விரைவில் அறிவுறுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. இந்த செய்தி ஒரு வதந்தி என்றும், இதுபோன்று போலி செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...