மே தினத்தை முன்னிட்டு உடுமலையில் எஐடியுசி மற்றும் சிஐடியு சார்பில் பொதுக்கூட்டம் - தொண்டர்கள் பங்கேற்பு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக அளவு பணத்தை செலவு செய்துள்ளார். மக்கள் ஒருபோதும் மோடியை தேர்ந்து எடுக்க மாட்டார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் மோகன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எஐடியுசி மற்றும் சிஐடியு சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெங்கிட கிருஷ்ணா சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். திருப்பூர் மாவட்ட தலைவர் மோகன் சிறப்புரை ஆற்றினார்.



அப்போது மோகன் பேசியாதவது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக அளவு பணத்தை செலவு செய்துள்ளார். மக்கள் ஒருபோதும் மோடியை தேர்ந்து எடுக்க மாட்டார்கள் என பேசினர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போன்று உடுமலை நகராட்சி அலுவலகத்தில் முன்பு சிஐடியு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எல்லம்மாள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஜெகதீசன், சிஜடியூ தலைவர் கனகராஜ், சிபிஐஎம் உடுமலைநகரச் செயலாளர் பாலதண்டபாணி ரங்கநாதன் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டங்களை யொட்டி உடுமலை போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....