மே தினத்தை முன்னிட்டு உடுமலையில் எஐடியுசி மற்றும் சிஐடியு சார்பில் பொதுக்கூட்டம் - தொண்டர்கள் பங்கேற்பு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக அளவு பணத்தை செலவு செய்துள்ளார். மக்கள் ஒருபோதும் மோடியை தேர்ந்து எடுக்க மாட்டார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் மோகன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எஐடியுசி மற்றும் சிஐடியு சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெங்கிட கிருஷ்ணா சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். திருப்பூர் மாவட்ட தலைவர் மோகன் சிறப்புரை ஆற்றினார்.



அப்போது மோகன் பேசியாதவது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக அளவு பணத்தை செலவு செய்துள்ளார். மக்கள் ஒருபோதும் மோடியை தேர்ந்து எடுக்க மாட்டார்கள் என பேசினர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போன்று உடுமலை நகராட்சி அலுவலகத்தில் முன்பு சிஐடியு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எல்லம்மாள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஜெகதீசன், சிஜடியூ தலைவர் கனகராஜ், சிபிஐஎம் உடுமலைநகரச் செயலாளர் பாலதண்டபாணி ரங்கநாதன் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டங்களை யொட்டி உடுமலை போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...