குனியமுத்தூரில் ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.1.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா திருட்டு

ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா, பிரிண்டர், ஹார்டு டிஸ்க் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் கோஷல் நகரை சேர்ந்தவர் ரிச்சர்ட்சன்(29). இவர் குனியமுத்தூர் பி.கே.புதூரில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி ரிச்சர்ட்சன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் விடுமுறை என்பதால் கடைக்கு செல்லவில்லை.



இந்நிலையில், நேற்று ஏப்ரல்.29 காலை ஸ்டூடியோவின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை சிலர் பார்த்து ரிச்சர்ட்சனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனே விரைந்து வந்து பார்த்தார்.அப்போது உள்ளே இருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா, பிரிண்டர், ஹார்டு டிஸ்க் மற்றும்10 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடம் வந்து அங்கு பதிவாகி இருந்த 2 கைரேகை பதிவுகளை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...