அதிகாரிகள் தங்களை அடிமைகள் போல் நடத்துவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் தூய்மைப்பணியாளர்கள் மனு

பணிதள பொறுப்பாளர்கள், தூய்மை பணியாளர்களை ஒருமையில் பேசுவதாகவும், கொத்தடிமைகள் போன்று வேலை வாங்குவதாகவும், ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள அதிகாரிகள் தங்களை அடிமைகள் போன்று நடத்துவதாகவும், இழிவாக பேசுவதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஏப்ரல்.30 புகார் மனு அளித்தனர்.

மேலும் பகுதி நேர வேலை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி மனு அளித்தனர். இது குறித்து பேசிய கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் சங்க உறுப்பினர் ரத்தினகுமார், பகுதி நேர வேலை அளிக்கப்பட வேண்டும் எனவும், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.

அங்குள்ள பணிதள பொறுப்பாளர்கள்,தூய்மை பணியாளர்களை ஒருமையில் பேசுவது, கொத்தடிமைகள் போன்று வேலை வாங்குவது, மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்த அவர், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...