உக்கடம் வாலாங்குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற கோவை மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை

வாலாங்குளத்தின் மேற்கு புறம் முழுவதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து குளத்தின் தண்ணீர் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு குளம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்களும், பொதுமக்களும் மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: கோவை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது உக்கடம் வாலாங்குளம். இந்த குளம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு குளத்தின் கரையோரம் நடைபாதை செல்வதற்கு ஏற்றவாறு டைல்ஸ்கள் அமைக்கப்பட்டு நடைபாதை செல்வோர் அமர்வதற்கு சிறந்த இட வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த குளத்தைச் சுற்றிலும் சிறிய வியாபார கடைகள், மற்றும் குளிர்சாதன கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் குளத்தின் கரையோரம் பூங்காக்கள் அமைப்பப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.



கிழக்குப்புறம் இவ்வாறு அமைக்கப்பட்ட போதும் மேற்கு புறமாக குளம் முழுவதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து குளத்தின் தண்ணீர் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு குளம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.



எனவே இந்த ஆகாயத்தாமரையை உடனே கோவை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும், அவ்வாறு உடனே அகற்றாத பட்சத்தில் கிழக்கு புறமும் ஆகாயத்தாமரை படர்ந்து குளம் முழுவதும் பரவி விடும். இது இயற்கைக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக இருக்கும். எனவே உடனடியாக இந்த ஆகாயத்தாமரைகளை அகற்றி இதனை சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு பராமரிக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று ஏப்ரல்.29 கோவை மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...