கோவை ராமநாதபுரத்தில் இன்ஜினியரின் வீட்டில் 41 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை

புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களை அழைத்து சென்று சோதனை நடத்தினர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.


Coimbatore: கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் சிவராம் நகரை சேர்ந்தவர் மன்மதன்(55). திருச்சியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனுராதா(52). இந்நிலையில், கடந்த 23ம் தேதி வீட்டை பூட்டி விட்டு அனுராதா திருச்சி சென்றார். பின்னர் கணவன்-மனைவி இருவரும் சொந்த வேலை காரணமாக டார்ஜிலிங் சென்றனர். 

இதனையடுத்து, நேற்று முன்தினம் அவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த வீட்டு வேலைக்கார பெண் சுசீலா என்பவர் செல்போனில் அனுராதாவை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். இதனையடுத்து அனுராதா கோவையில் உள்ள தனது சகோதரரை வீட்டுக்கு சென்று பார்க்கும் படி கூறினார். மேலும் நேற்று (ஏப்ரல்.27) அனுராதா கோவை திரும்பினார். 



வீட்டுக்கு சென்று பார்த்த போது உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 41 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ. 23 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. வீடு பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அனுராதா ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீசார் சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதில், கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...