ஒரு குடம் குடிநீர் 12 ரூபாய், மாவட்ட நிர்வாகம் தங்களை புறக்கணிப்பதாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் மனு

கோவை, குனியமுத்தூர் பிளையார் புரம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருவதாக கூறியவர்கள் தாங்கள் வசித்து வரும் பகுதியில் உப்பு தண்ணீர் குழாய் மாநகராட்சி சார்பில் அமைக்கபட்டுள்ளதாகவும் இதில் தற்போது 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக கூறினர். 



மேலும் தங்கள் பகுதியில் தெரு விளக்கு கம்பம் அமைக்கபட்டு பல வருடங்கள் ஆகியும் விளக்குகள் பொருத்தப்படாமலேயே உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கூறியவர்கள் உப்பு தண்ணீர் முறையாக வழங்காத நிலையில் குடி நீருக்காக வாடகை வாகனம் அமர்த்தப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் நீர் எடுத்து வந்து உபயோகிப்பதாகவும் இதற்காக ஒவ்வெரு முறையும் ரூபாய் 350லிருந்து ரூபாய் 500 வரை செலவாகுவதாகவும் தனியார் வாகனம் மூலம் ஒரு முறை அதிகபட்சமாக 30 குடங்களில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுவதாக கூறிகின்றனர். 

மேலும், 1 குடம் குடிதண்ணீர் பெற ரூபாய் 12 செலவழிப்பதாக கூறினர். இது குறுத்து மாமன்ற உறுப்பினரிடம் கூறினால் ஆக்கிரமிப்பு இடத்தில் இருக்கும் உங்களுக்கு எதுவும் செய்து தர முடியாது என கூறுவதாகவும் தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுக்காக தங்களை தேடி வருவதாக குற்றம் சாட்டினர். தங்கள் பிரச்சனை குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கபட்டும் எந்த ஒரு நடவடிக்கையும், மேற்கொள்ளவில்லை இதுவரை 3 ஆட்சியர்கள் மாறியுள்ளனர் ஆனால் தங்கள் பிரச்சனை இன்னும் தீரவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

Newsletter

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...