கோவையில் மண் பாண்டங்கள் செய்ய போதுமான மண் கிடைக்க வேண்டும் - மண்பானை வியாபாரிகள் கோரிக்கை

கடந்த காலங்களில் போதுமான மண் கிடைத்து வந்த நிலையில், தற்போது மண் தட்டுப்பாடு அதிகரித்து விட்டது. இதனால் மண்பாண்டங்கள் செய்யும் தொழில் நலிவடைந்துள்ளது என்று மண்பானை வியாபாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவையில் மண்பானைகள் தயாரிப்புக்கு மண் கிடைப்பதில் சிக்கல் உள்ளதால், மண்பானை தொழில் நலிவடைந்து வருவதாக மண்பானை தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மண்பானை விற்பனையில் ஈடுபடுபவர்கள் இன்று கூறியதாவது, முன்பைவிட மண்பாண்டங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. கோடை வெயிலின் வெப்பம் அதிகரித்துள்ளதால், மண் பானைகளை வாங்க அதிக மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மண்ணால் செய்த பானைகளின் முக்கியத்துவம், பயன்கள் அதிகம் இருப்பதால் மண்பானைகள் விற்பனை அதிகரித்து உள்ளது. ஆனால் அதனை உற்பத்தி செய்ய போதுமான மண் கிடைப்பதில்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே, மண் பாண்டங்கள் செய்ய போதுமான மண் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் போதுமான மண் கிடைத்து வந்த நிலையில், தற்போது மண் தட்டுப்பாடு அதிகரித்து விட்டது. இதனால் மண்பாண்டங்கள் செய்யும் தொழில் நலிவடைந்துள்ளது.

மண் எடுக்க அனுமதி இருந்தும், பானைகள் தயாரிக்க மண் அள்ள முடியாத நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், மண்பானைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். மேலும் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்படும். வரும் காலங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்க எங்களுக்கு போதுமான மண் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...