கோவையில் மன நலம் பாதிக்கப்பட்ட நபர் பேருந்து முன் பாய்ந்து உயிரிழப்பு – சிசிடிவி காட்சி வெளியீடு

அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக உறவினர்கள் அழைத்து வந்தபோது, மனநலம் பாதிக்கப்பட்ட ஆனந்த் என்பவர் தனியார் பேருந்து முன் பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ஆனந்த் (40). இவருக்கு மன நலம் பாதிப்பு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஆனந்த்துக்கு கடந்த 21 ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.



இதனால் சிகிச்சைக்காக அவரது தாய் மற்றும் பாட்டி ஆனந்தை பேருந்தில் அழைத்துச் செல்ல இரவு 9 மணியளவில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளனர். அப்போது பேருந்துக்காக காத்திருந்த போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து முன் ஆனந்த் பாய்ந்தார். இதில் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக மேற்கு போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆனந்த் தனியார் பேருந்து முன் பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...