புதுப்பையில் தாராபுரம் வட்டாட்சியர் சிறைபிடிப்பு - வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆற்றில் இறங்கி போராட்டம்

புதுப்பை பகுதியில் பாயும் அமராவதி ஆற்றில் முறைகேடாக அரசின் எந்தவொரு ஒப்புதலும் இன்றி கிணறு அமைக்கும் பணி துவங்கியுள்ளதாகவும், இதனால் வெள்ளகோவில் ஒன்றியம் பகுதிக்கும், நகர பகுதிக்கும் விநியோகிக்க கூடிய தண்ணீருக்கு தட்டுபாடுஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பையில் பாயக்கூடிய அமராவதி ஆற்றில் முறைகேடாக கிணறு அமைத்து தாராபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மூலனூருக்கு குடிநீர் எடுத்ததை தொடர்ந்து புதுப்பை பகுதி பொதுமக்கள் நடுரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் வட்டாட்சியரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம் தாலுக்கா மூலனூருக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக வெள்ளகோவில் அடுத்த புதுப்பை பகுதியில் பாயும் அமராவதி ஆற்றில் முறைகேடாக அரசின் எந்தவொரு ஒப்புதலும் இன்றி கிணறு அமைக்கும் பணி துவங்கியுள்ளனர். இதனால் வெள்ளகோவில் ஒன்றியம் பகுதிக்கும், நகர பகுதிக்கும் விநியோகிக்க கூடிய தண்ணீருக்கு தட்டுபாடுஏற்படும் வாய்ப்புள்ளது. இதே பகுதியில் கிணறு அமைக்கும் அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.



எனவே இதனால் பல்லாயிரம்குடும்பங்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே வெள்ளகோவில் பகுதிக்காக தோண்டப்பட்ட கிணறு சுமார் 7 அடி இருக்கும் பட்சத்தில் தற்போது தண்ணீர் தேவைக்காக சுமார் 3 இடங்களில் அளவுகள் செய்யும் பணியும் இன்று காலை முதல் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த கிணறு இருக்கும் பகுதிக்கு அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த வாரத்தில் பண்படங்கு சக்திவாய்ந்த வேட்டுகள் வைத்து சுமார் 40 அடி அகலத்திற்கு குழிகள் தோண்டப்பட்டு தண்ணீர் எடுக்க முயற்சி செய்ததை ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தனியார் நிறுவனத்தினத்தினரும் அவர்களுக்கு உறுதுணையாகவும் அரசு அதிகாரிகளும் நேற்று திடீரென வெள்ளகோவில் நகரம் மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கிணறு அருகே எவ்வித அனுமதியும் இன்றி நேற்று காலையில் ஆற்றில் அளவுகள் எடுக்கப்பட்டு மூன்று இடங்களில் கிணறுகள் வெட்டப்படுவதாகவும் இதற்கு புதுப்பை ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமலும் பணிகளை துவங்கி உள்ளனர். இதை அறிந்த பொதுமக்கள் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் வெங்கடேச சுதர்ஷன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மூலனூர் வெள்ளகோவில் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து வெள்ளகோவில் போலிசாருக்கும், தாராபுரம் வட்டாச்சியர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞான பிரகாஷ் மற்றும் தாராபுரம் வட்டாச்சியர் கோவிந்தசாமி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் சரமாரியாக கேள்விகளை கேட்டனர். மேலும் இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அதிகாரிகளை கிணறு வெட்டிய இடத்திற்கு அழைத்து சென்றனர்.



சுமார் 7 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தோண்டப்பட்ட குழிகளை மூடினால் மட்டுமே இந்த ஆற்றைவிட்டு வெளியேறுவோம் என வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வெங்கடேச சுதர்சன் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் குழி தோண்டிய இடத்திலேயே அமர்ந்து கொண்டார். இதனால் பதற்றம் நிலவியது. பின்னர் இரவு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து அமராவதி ஆற்றில் முறைகேடாக தோண்டப்பட்டது கிணற்றை மூடுவதாக உறுதியளித்தனர். மேலும் கிணறுகள் அமைக்க எடுத்து வந்த பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றனர்.

தனியார் கிணறுகள் வெட்டியதை மூடினால் மட்டும் போதுமா எவ்வித அறிவிப்பு ஆணைகளும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் ஆற்றில் இருந்து நீரை எடுத்து செல்ல கிணறுகள் வெட்டுவதோ அல்லது குழாய்கள் அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா பொதுமக்கள் போராடினால் மட்டும் தான் சம்பவ இடத்திற்கு வந்து அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். 

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...