கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை காப்பாற்றும் வகையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்களால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.

இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடந்த நான்கு வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து இரண்டு வாரம் பேரூர் செல்வசிந்தாமணி குளத்தினை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து, இன்று எட்டாவது வாரமாக வெள்ளலூர் குளத்தில் இரண்டாவது களப்பணியில் ஈடுபட்டனர். இதில், வெள்ளலூர் குளத்தினை ஆக்கிரமித்து வளர்ந்திருந்த ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் வெட்டப்பட்டு அதில் இருந்த ஆயிரக்கணக்கான கருவேல விதைகள் தனியாக அகற்றப்பட்டன. அந்த விதைகள் அனைத்தும் ஓர் இடத்தில் சேகரிக்கப்பட்டு முழுவதுமாக அழிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, வரும் அடுத்த ஞாயிறன்று ஆத்துப்பாளம் அருகே வெள்ளலூர் தடுப்பணையில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்றவுள்ளதாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடந்த நான்கு வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து இரண்டு வாரம் பேரூர் செல்வசிந்தாமணி குளத்தினை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து, இன்று எட்டாவது வாரமாக வெள்ளலூர் குளத்தில் இரண்டாவது களப்பணியில் ஈடுபட்டனர். இதில், வெள்ளலூர் குளத்தினை ஆக்கிரமித்து வளர்ந்திருந்த ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் வெட்டப்பட்டு அதில் இருந்த ஆயிரக்கணக்கான கருவேல விதைகள் தனியாக அகற்றப்பட்டன. அந்த விதைகள் அனைத்தும் ஓர் இடத்தில் சேகரிக்கப்பட்டு முழுவதுமாக அழிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, வரும் அடுத்த ஞாயிறன்று ஆத்துப்பாளம் அருகே வெள்ளலூர் தடுப்பணையில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்றவுள்ளதாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.