உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பூவோடு எடுக்கும் நிகழ்வு துவக்கம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலை வரை பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம்தேதி பூச்செறிதல் நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது .இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், தேவாங்கர் சமூக நல மன்றத்தின் சார்பில் கொடியேற்றம் விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.



இதற்கிடையில் நேற்று இரவு பூவோடு எடுக்கும் நிகழ்வு தொடங்கியது. இதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் டோக்கன் வழங்கப்பட்டது. பக்தர்கள் வரிசையில் நின்று 250 ரூபாய் செலுத்தி டோக்கன் பெற்று பூவோடு எடுத்தனர். இன்று முதல் வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலை வரை பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெள்ளிக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மன் கோவிலில் குவிந்தனர்.

மேலும் தேர் திருவிழாவுக்கு தினமும் கூட்டம் அதிகமாக மாரியம்மன் கோவிலுக்கு வருவதால் முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...