உடுமலை அருகே பாசனத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

அரசாணையில் ஐந்து நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவு இருக்கும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து நான்கு நாட்களில் தண்ணீர் நிறுத்தம் செய்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை மூலம் பெதம்பம்பட்டி அருகில் உள்ள ஜே கிருஷ்ணாபுரம் கிளை வாய்க்கால் மூலம் 6500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலையில் திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் ஆண்டு பாசனத்தில் இரண்டாம் சுற்றில் ஜே கிருஷ்ணாபுரம் கிளை கால்வாய் பகுதியில் பாசனத்திற்கு ஐந்து நாட்கள் தண்ணீரை வழங்க வேண்டிய நிலையில், தற்சமயம் நான்கு நாட்கள் மட்டும் வழங்கி விட்டு தண்ணீர் முன்னறிவிப்பின்றி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பயிர்கள் காய்ந்து வருகின்றன. அரசாணையில் ஐந்து நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவு இருக்கும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து தண்ணீர் நிறுத்தம் செய்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதிலளிக்க காரணத்தால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உடுமலை செஞ்சேரிமலை சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொது பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீர் முறையாக வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்ததால் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.



உடுமலை அருகே சாலை மறியல் போராட்டம் காரணமாக உடுமலை செஞ்சேரி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...