கோவையில் ரயில் தடம் அருகே உள்ள குடியிருப்புகளில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல்

SIHS காலனி, இருகூர் ரயில்வே பாலம் உட்பட்ட 20 இடங்களில் 22 கேமராக்கள், ரத்தினபுரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட 6 இடங்களில் 12 கேமராக்கள், பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட 27 இடங்களில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.


கோவை: கோவை மாநகரில் ரயில் தடங்கள் அருகே உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு இல்லை என்பதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது அண்மையில் நடந்த ஒரு சம்பவம் மூலம் வெளிவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி அதிகாலை நேரத்தில், 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று பீளமேடு பூரணி நகர் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் இல்லத்தில் ரூ.10 லட்சம், 30 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு அருகே உள்ள ரயில் தடம் வழியே சென்று தப்பித்துள்ளது. வெளிச்சம் இல்லாததாலும், கண்காணிப்பு இல்லாததாலும் எளிதில் அவர்கள் தப்பியுள்ளனர்.

இதையடுத்து கோவையில் ரயில் தடங்கள் அருகே உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்து முடிவெடுக்கப்பட்டு முதல் கட்டமாக 103 இடங்களில் இதை செய்ய கோவை மாநகர காவல் துறையினர் திட்டமிட்டு உள்ளனர். தண்டவாளம் உள்ள வழிநெடுகவே இந்த கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளன.

அதன்படி, சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு ஒண்டிப்புதூர், SIHS காலனி, இருகூர் ரயில்வே பாலம் உட்பட்ட 20 இடங்களில் 22 கேமராக்கள், ரத்தினபுரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட 6 இடங்களில் 12 கேமராக்கள், பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட 27 இடங்கள் மற்றும் போத்தனூர், துடியலூர், வடகோவை, இருகூர் ஆகிய இடங்களில் உள்ள பகுதிகளில் கார்ப்ரேட் சமூக பொறுப்பு நிதி (CSR) உதவியுடன் விரைவில் அமைக்கப்படவுள்ளது என்று தகவல் இன்று (ஏப்ரல்.18) வெளியாகியுள்ளது.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...