கோவையில் ரயில் தடம் அருகே உள்ள குடியிருப்புகளில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல்

SIHS காலனி, இருகூர் ரயில்வே பாலம் உட்பட்ட 20 இடங்களில் 22 கேமராக்கள், ரத்தினபுரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட 6 இடங்களில் 12 கேமராக்கள், பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட 27 இடங்களில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.


கோவை: கோவை மாநகரில் ரயில் தடங்கள் அருகே உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு இல்லை என்பதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது அண்மையில் நடந்த ஒரு சம்பவம் மூலம் வெளிவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி அதிகாலை நேரத்தில், 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று பீளமேடு பூரணி நகர் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் இல்லத்தில் ரூ.10 லட்சம், 30 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு அருகே உள்ள ரயில் தடம் வழியே சென்று தப்பித்துள்ளது. வெளிச்சம் இல்லாததாலும், கண்காணிப்பு இல்லாததாலும் எளிதில் அவர்கள் தப்பியுள்ளனர்.

இதையடுத்து கோவையில் ரயில் தடங்கள் அருகே உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்து முடிவெடுக்கப்பட்டு முதல் கட்டமாக 103 இடங்களில் இதை செய்ய கோவை மாநகர காவல் துறையினர் திட்டமிட்டு உள்ளனர். தண்டவாளம் உள்ள வழிநெடுகவே இந்த கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளன.

அதன்படி, சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு ஒண்டிப்புதூர், SIHS காலனி, இருகூர் ரயில்வே பாலம் உட்பட்ட 20 இடங்களில் 22 கேமராக்கள், ரத்தினபுரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட 6 இடங்களில் 12 கேமராக்கள், பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட 27 இடங்கள் மற்றும் போத்தனூர், துடியலூர், வடகோவை, இருகூர் ஆகிய இடங்களில் உள்ள பகுதிகளில் கார்ப்ரேட் சமூக பொறுப்பு நிதி (CSR) உதவியுடன் விரைவில் அமைக்கப்படவுள்ளது என்று தகவல் இன்று (ஏப்ரல்.18) வெளியாகியுள்ளது.

Newsletter

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...