நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மெழுகுவர்த்தியில் தேர்தல் விழிப்புணர்வு - குனியமுத்தூர் UMT ராஜா அசத்தல்

மெழுகுவர்த்தியில் இந்தியன் வரைபடம், தேர்தல் லோகோ உள்ளிட்டவை வரைந்து, நாடு ஒளிர, நாளை உனது நாள் மறவாதீர் என குறிப்பிட்டு UMT ராஜா வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் வருகிற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசு மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற கலைஞர், இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் நேற்று (ஏப்ரல்.17) வெளியிட்டுள்ளார்.

அதில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, மெழுகுவர்த்தியில் இந்தியன் வரைபடம், தேர்தல் லோகோ உள்ளிட்டவை வரைந்து, நாடு ஒளிர, நாளை உனது நாள் மறவாதீர் என குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...