நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மெழுகுவர்த்தியில் தேர்தல் விழிப்புணர்வு - குனியமுத்தூர் UMT ராஜா அசத்தல்

மெழுகுவர்த்தியில் இந்தியன் வரைபடம், தேர்தல் லோகோ உள்ளிட்டவை வரைந்து, நாடு ஒளிர, நாளை உனது நாள் மறவாதீர் என குறிப்பிட்டு UMT ராஜா வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் வருகிற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசு மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற கலைஞர், இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் நேற்று (ஏப்ரல்.17) வெளியிட்டுள்ளார்.

அதில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, மெழுகுவர்த்தியில் இந்தியன் வரைபடம், தேர்தல் லோகோ உள்ளிட்டவை வரைந்து, நாடு ஒளிர, நாளை உனது நாள் மறவாதீர் என குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...