வால்பாறையில் மேளதாளங்களுடன் திமுகவினரின் இறுதி கட்ட பிரச்சாரம் நிறைவு

திமுக கட்சியினர் காந்தி சிலை வளாகத்தில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அதிமுகவினர் புதிய பேருந்து நிலையம் பகுதியிலும், பாரதிய ஜனதா கட்சியினர் அண்ணா திடல் பகுதியிலும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி நேற்று மாலை 6 மணி அளவில் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் திமுக, அதிமுக, பிஜேபி போன்ற கட்சிகள் வால்பாறையில் திமுக கட்சியினர் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் காந்தி சிலை வளாகத்திலும், இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அதிமுகவினர் புதிய பேருந்து நிலையம் பகுதியிலும், பாரதிய ஜனதா கட்சியினர் அண்ணா திடல் பகுதியிலும் இறுதி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக நகரச் செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் காந்தி சிலை வளாகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட திமுக கட்சியினர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



இதில் முன்னாள் நகர மன்ற தலைவர் கோ.கணேசன், திமுக ஆட்சியின் சாதனைகளைப் பற்றியும் திமுக கட்சியை வால்பாறை மக்களுக்கு செய்த சாதனைகளைப் பற்றியும், மகளிர் பேருந்து இலவச பேருந்து மற்றும் மகளிர் உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களை வலியுறுத்தி வாக்கு சேகரித்தனர்.

கட்சியினர் மேள தாளங்கள் தட்டி டான்ஸ் ஆடி இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு நிறைவு செய்தனர். இதில் நாங்க நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, துணைத்தலைவர் செந்தில்குமார், திப்பம்பட்டி ஆறுச்சாமி, ஜே.பாஸ்கர், செல்வம், மகுடீஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் காவல்துறையினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு 6 மணி அளவில் பிரச்சாரம் நிறைவு பெற்றது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...